நண்பனை பார்த்த நேரம் மட்டும்
ஒட்டிக் கொண்டது என்ஞாபகத்தில
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்...
நண்பர்களே நலமா? நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பதிவை மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுதுகிறேன். எனது மகிழ்சிக்கு காரணம் நமது கல்லூரி நிர்வாகம் நீண்ட நாட்களுக்கு பிறகு முன்னால் மாணவர்கள் சந்திப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்து உள்ளது. இது நாம் அனைவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசி மகிழ ஒரு இனிமையான தருணம்.
இதை எழுதும் போது இந்த பாடல் நினைவில் வருகிறது..
மரத்தில் இருந்து உதிர்ந்த பூக்கள்
மீண்டும் கிளைக்கு சென்றிடுதே....
ஆம் நண்பர்களே, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நாம் சந்திக்க நமது கல்லூரி ஏற்பாடு செய்து உள்ளது.இந்த விழாவில் நமது கல்லூரியில் 2000-2010 ஆம் ஆண்டு வரை பயின்ற அனைத்து மாணவர்களும் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது. (அனைவருக்கும் மகிழ்ச்சிதானே!!!)
முன்னாள் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி (ALUMNI MEETING - 2000-2010 Batch Students)
நாள்: 06/03/2011 - ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 10 மணி
இடம்: சுதர்சன் பொறியியற் கல்லூரி மண்டபம் (Sudharsan Engineering College, Auditorium - Above Library Block)
விழா நடைபெறும் நாள் விடுமறை தினம் என்பதால் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறக்கச் செய்வோம்...
மீண்டும் நாம் சந்திக்க ஒரு வாய்ப்பு... Dont Miss it.....
குறிப்பு: அன்றைய தினம் அனைவருக்கும் மதிய உணவு கல்லூரி நிர்வாகத்தால் வழங்கப்படும்.