நாம் கடந்து வந்த பாதை


20/09/2004 - முதல் வருடம் - விதைத்த நாள்!
2005 - இரண்டாம் வருடம் - வளர்ந்த நாள்!
2006 - மூன்றாம் வருடம் - மலர்ந்த நாள்!
05/05/2008 - கல்லூரி சோலையில் இருந்து மலர்கள் வெளிவந்த நாள்!
01/12/2010 - மீண்டும் மலர்கள் இணைய இணையம் மூலம் ஒரு நாள்!!!



Wednesday, December 22, 2010

Our Madam Got Award

நண்பர்களே நலமா... நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பதிவை எழுதுகிறேன். நமக்கு மூன்றாம் ஆண்டு - ஆறாவது செமஸ்டரில் Digital Communication பாடத்திற்கு பூபதி ராணி என்ற ஆசிரியை வந்தார். அவரது வகுப்புகளும் மிக நன்றாக சென்றது. அந்த நாட்களும் மற்றும் அந்த ஆசிரியையும் உங்களுக்கு நினைவில் இருக்கும் என நினைக்கிறன்...

என்னடா இது முதல் செமஸ்டர் பதிவுகளே முடியாதே நிலையில் மூன்றாம் ஆண்டு பதிவிற்கு தாவி விட்டேனே என நினைக்க வேண்டாம்.. இந்த மகிழ்ச்சியான செய்தியை தற்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் மிக பொருத்தமாக இருக்கும்.. 

நமது ஆசிரியை பூபதி ராணி அவர்கள் "இந்தியாவின் தொழில் நுட்ப (Engineering College) கல்லூரிகளில் சிறந்த பெண் பேராசிரியை" என்ற விருதை டிசம்பர் மாதம் எட்டாம் தேதி அன்று சென்னையில் நடந்த விழாவில் பெற்று உள்ளார்கள் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அவர்களுக்கு நமது வலைத்தளம் சார்பிலும், நண்பர்கள் சார்பிலும் பாராட்டுகளை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன். நாம் இந்தியாவின் தொழில் நுட்ப (Engineering College) கல்லூரிகளில் சிறந்த பெண் பேராசிரியை என்ற விருதை பெற்ற ஆசிரியையிடம்   படித்தோம் என்பதை எண்ணி  பெருமை அடைவோம்....

செய்தி இடம் பெற்று உள்ள தளம்: http://isteonline.in/?q=node/203


அந்த தளத்தில் வந்த ஒரு பகுதி  செய்தி கீழே,

 
15. Shayesta Akhtar Memorial National Award for Best Women Engineering College Teacher instituted by Dr. Sayed Majid Ali, ISTE Executive Council Member and the Deputy Controller of Examination & Associate Professor, Electrical Engineering Dept., KIIT University, Bhubaneswar, Orissa in the memory of his late elder sister Shayesta Akhtar.
Ms. Boopathi Rani R.
Assistant Professor, ECE Dept.
Sudharsan Engineering College
Sathiyamangalam, Pudukkottai, T.N.

            நமது ஆசிரியர் பூபதி ராணி அவர்கள் விருது வாங்கும் போது எடுத்த படம்

இந்த புகைப்படம் டிசம்பர் மாதம் பத்தாம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட தினத் தந்தி நாளிதழில் நான்காம் பக்கத்தில் வெளி வந்து உள்ளது.

Thursday, December 2, 2010

DAY ONE

நமது நான்கு வருட கல்லூரி பயணத்தின் முதல் நாள் 2004ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 20.நம் பள்ளி படிப்பிற்கு பின் கல்லூரி வாழ்வில் முதல் அடி எடுத்து வைத்த நாள் இன்று. இந்தியாவின் பல இடங்களில் இருந்து வந்த அனைவரும் ஒன்றாக சங்கமம் ஆனது நம் சுதர்சன் பொறியியல் கல்லூரி மூலமாக. அந்த நாளில் நாம் ஒருவரை ஒருவர் முன் பின் அறிந்திடாத நபர்களை சந்தித்த தருணம். நமது கல்லூரி விரிவுரையாளர்கள் மாணவர்களை அவர்களது பெற்றோருடன் ஐந்து குழுவாக பிரித்து நாம் படிக்க போகும் கல்லூரியில் ஒவ்வொரு இடமாக அழைத்து சென்றனர். பின்னர் மதியம் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுவையான மதிய உணவுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். பின் மதியம் அனைவரும் அவரவர் வகுப்பில் சங்கமம் ஆனோம்.


நமக்கு முதல் ஆண்டு வகுப்பு ஆசிரியராக திரு.முத்து குமார சுவாமி அவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் நமக்கு இரண்டாம் செமஸ்டரில் கணிதப் பாடம் எடுத்த ஆசிரியர். முதல் செமஸ்டரில் நமக்கு மொத்தம் ஆறு பாடங்கள் மற்றும் நான்கு செய்முறை வகுப்புகள்(Lab). நமக்கு ஆங்கிலம் எடுத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் பெயர் ஜனார்த்தனன் (பெயர் சரியாக நினைவில்லை)மற்றும் வெற்றிச்செல்வி என்ற ஆசிரியை, கணிதத்திற்கு ஷீலா என்றவரும், வேதியியலுக்கு (Chemistry) நாராயணன் என்றவரும், இயற்பியலுக்கு (Physics)பழனியப்பன்,OM.கண்ணன் மற்றும் சாந்த குமரி என மூன்று பேரும், Fundamentals Of Computing என்ற பாடத்திற்கு செந்தில் குமார் மற்றும் அருள்(பெயர் சரியாக நினைவு இல்லை)என்ற இருவரும்,Engineering Graphics பாடத்திற்கு ஜெய் கணேஷ் என்பவரும் வந்தனர்.


நமது கல்லூரி நாட்கள் மெல்ல மெல்ல அழகாக நகர்ந்தன. அனைவரும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு பேருந்தில் வருவதில் இருந்து மாலை திரும்பும் வரை ஒவ்வொரு நிமிடமும் இனிமையை ஓடியது. இந்நாளில் சில மாணவர்கள் கல்லூரி பேருந்தில் வந்து சென்றனர்(பாலா,ராபின்,இசை,புருஷோத்தமன்)மற்றும் சிலர் எட்டாம் நம்பர் (Bus Number : 8) பேருந்திலும் (நான் உட்பட பாலசந்தர்,செந்தில் குமார்,செந்தில் குமரன்,விஜய்)தவிர மற்ற அனைவரும் மற்ற பேருந்துகளில் வந்தனர் மற்றும் கருப்பையா தன் இல்லம் கல்லூரிக்கு அருகில் இருந்ததால் சில நாட்கள் வண்டியிலும்,நடந்தும், மேலும் ஒரு சில மாணவர்கள் தொலை தூரம் காரணமாக கல்லூரி விடுதியில் தங்கி பயின்றனர்.


இன்னும் நினைவுகள் மலரும்...