நாம் கடந்து வந்த பாதை


20/09/2004 - முதல் வருடம் - விதைத்த நாள்!
2005 - இரண்டாம் வருடம் - வளர்ந்த நாள்!
2006 - மூன்றாம் வருடம் - மலர்ந்த நாள்!
05/05/2008 - கல்லூரி சோலையில் இருந்து மலர்கள் வெளிவந்த நாள்!
01/12/2010 - மீண்டும் மலர்கள் இணைய இணையம் மூலம் ஒரு நாள்!!!



Thursday, December 2, 2010

DAY ONE

நமது நான்கு வருட கல்லூரி பயணத்தின் முதல் நாள் 2004ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 20.நம் பள்ளி படிப்பிற்கு பின் கல்லூரி வாழ்வில் முதல் அடி எடுத்து வைத்த நாள் இன்று. இந்தியாவின் பல இடங்களில் இருந்து வந்த அனைவரும் ஒன்றாக சங்கமம் ஆனது நம் சுதர்சன் பொறியியல் கல்லூரி மூலமாக. அந்த நாளில் நாம் ஒருவரை ஒருவர் முன் பின் அறிந்திடாத நபர்களை சந்தித்த தருணம். நமது கல்லூரி விரிவுரையாளர்கள் மாணவர்களை அவர்களது பெற்றோருடன் ஐந்து குழுவாக பிரித்து நாம் படிக்க போகும் கல்லூரியில் ஒவ்வொரு இடமாக அழைத்து சென்றனர். பின்னர் மதியம் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுவையான மதிய உணவுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். பின் மதியம் அனைவரும் அவரவர் வகுப்பில் சங்கமம் ஆனோம்.


நமக்கு முதல் ஆண்டு வகுப்பு ஆசிரியராக திரு.முத்து குமார சுவாமி அவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் நமக்கு இரண்டாம் செமஸ்டரில் கணிதப் பாடம் எடுத்த ஆசிரியர். முதல் செமஸ்டரில் நமக்கு மொத்தம் ஆறு பாடங்கள் மற்றும் நான்கு செய்முறை வகுப்புகள்(Lab). நமக்கு ஆங்கிலம் எடுத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் பெயர் ஜனார்த்தனன் (பெயர் சரியாக நினைவில்லை)மற்றும் வெற்றிச்செல்வி என்ற ஆசிரியை, கணிதத்திற்கு ஷீலா என்றவரும், வேதியியலுக்கு (Chemistry) நாராயணன் என்றவரும், இயற்பியலுக்கு (Physics)பழனியப்பன்,OM.கண்ணன் மற்றும் சாந்த குமரி என மூன்று பேரும், Fundamentals Of Computing என்ற பாடத்திற்கு செந்தில் குமார் மற்றும் அருள்(பெயர் சரியாக நினைவு இல்லை)என்ற இருவரும்,Engineering Graphics பாடத்திற்கு ஜெய் கணேஷ் என்பவரும் வந்தனர்.


நமது கல்லூரி நாட்கள் மெல்ல மெல்ல அழகாக நகர்ந்தன. அனைவரும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு பேருந்தில் வருவதில் இருந்து மாலை திரும்பும் வரை ஒவ்வொரு நிமிடமும் இனிமையை ஓடியது. இந்நாளில் சில மாணவர்கள் கல்லூரி பேருந்தில் வந்து சென்றனர்(பாலா,ராபின்,இசை,புருஷோத்தமன்)மற்றும் சிலர் எட்டாம் நம்பர் (Bus Number : 8) பேருந்திலும் (நான் உட்பட பாலசந்தர்,செந்தில் குமார்,செந்தில் குமரன்,விஜய்)தவிர மற்ற அனைவரும் மற்ற பேருந்துகளில் வந்தனர் மற்றும் கருப்பையா தன் இல்லம் கல்லூரிக்கு அருகில் இருந்ததால் சில நாட்கள் வண்டியிலும்,நடந்தும், மேலும் ஒரு சில மாணவர்கள் தொலை தூரம் காரணமாக கல்லூரி விடுதியில் தங்கி பயின்றனர்.


இன்னும் நினைவுகள் மலரும்...

3 comments:

  1. MACHI NAMA 8 PAYANATHA GYABAGA PADUTHITIAE DA... ENNA ORU LIFE CHANCEEE ILLA DA

    ReplyDelete
  2. sorry guyz i joined with the ship in 2005,anyway i missed the first yr celebrations, no probs i ll join with this when u start 2ndyr memories,am wating 4 1st yr guyz comments pl share it...

    ReplyDelete
  3. anna malai i thing first class of our college life had conducted to us Mr. Palaniyappan, is it correct or not..

    ReplyDelete